பிரபல திரையிசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலமாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதையடுத்து தென்னிந்திய திரைத்துறை நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு நேரில் சென்று எஸ்பிபியில் உடல்நிலை குறித்து நலம் விசாரித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் “உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. அவர்கள் நம்பும் இறைவனை வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
கவலைக்கிடமாக இருக்கிறார். அவர் நலமாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளார்.